• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக இரு அணியாக பிரிந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொள்ளை தொடரும் – மு.க. ஸ்டாலின்

February 13, 2017 தண்டோரா குழு

அதிமுக இரு அணியாக பிரிந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொள்ளை தொடரும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் திமுக உயர்நிலைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் க. அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூடத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:

திமுக உயர்நிலை செயற்குழுக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளன. தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளைக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவிக்குச் சண்டையிட்டு வருகிறார்.

ஆளுநர் அரசியல் சட்டப்படி நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை திமுக கொடுத்துள்ளது.

சசிகலாவுக்குப் பதில் சொல்லி என் தரத்தைக் குறைத்து கொள்ள விரும்பவில்லை. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொள்ளை தொடரும்“.

இவ்வாரு ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்க