May 22, 2017
தண்டோரா குழு
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக ஏற்கனவே இரு அணிகளாக பிரிந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கடந்த வாரத்தில் தனித்தனியாக ஆலேசானை கூட்டம் நடத்தினர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற அச்சத்திலேயே சட்டமன்றத்தை கூட்ட ஆட்சியாளர்கள் தயங்குவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியை சேர்ந்த 8எம்எல்ஏக்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
விரைவில் சட்டப்பேரவை கூட உள்ளதால் இந்த சந்திப்பும், எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.