• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘அது நான் தான் ஆனால் குரல் என்னுடையது இல்லை’ – எம்.எல்.ஏ., சரவணன்

June 13, 2017 தண்டோரா குழு

“வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல” என்று ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தர காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வீடியோ ஒன்று நேற்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து எம்.எல்.ஏ. சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல. நான் முன்பு எப்போதோ அளித்த பேட்டியில் குரலை மட்டும் மாற்றி டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். பேரம் பேசியதாக வெளியான அந்த வீடியோவில் உண்மை இல்லை.

கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு குறித்து நான் பேசவில்லை. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிச்சயமாக வழக்கு தொடர்வேன்” என்றார்.

மேலும் படிக்க