• Download mobile app
04 Feb 2025, TuesdayEdition - 3282
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னூர் பகுதியில் நடந்து சென்ற நபர்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

February 3, 2025 தண்டோரா குழு

அன்னூர் பகுதியில் நடந்து சென்ற நபர்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 5 நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசிக்கும் சுபாஷ் (39) என்பவர் கடந்த 02.02.2025 அன்று இரவு ஒரு மணிக்கு பணி முடித்துவிட்டு தனது நண்பர்கள் நால்வருடன் கெம்பநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் தண்ணீர் தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஐந்து நபர்கள் சுபாஷ் மற்றும் நண்பர்கள் நால்வரையும் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 25000/-ம் பணம் மற்றும் ரூபாய் 30000/- மதிப்புள்ள மூன்று செல்போன்களையும் பறித்துக்கொண்டு வழிப்பறி செய்ததாக அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் (03.02.2025) ம் தேதி அன்னூர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (22),லோகேஷ் (22), பூபதி (22), விஜய் (22), மற்றும் சந்தோஷ் குமார் (22) ஆகிய ஐந்து நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்கள்.

இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான ரூபாய் 30,000/-மதிப்புள்ள மூன்று செல்போன்கள் மற்றும் 25,000/- ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க