• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்பு முகில் அறக்கட்டளை துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் சேவை திட்டம் வழங்கும் நிகழ்ச்சி

June 25, 2023 தண்டோரா குழு

அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் அன்பு மாவட்டம் 250 எஸ் சார்பாக அன்பு முகில் அறக்கட்டளை துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் சேவை திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அலையன்ஸ் கிளப் கோவை மாவட்ட ஆளுநர் ஸ்ரீனிவாச கிரி மற்றும் மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி ஆகியோர் கலந்து கொண்டு அன்பு முகில் அறக்கட்டளையை துவக்கி வைத்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சுந்தராபுரம் விஏஓ எம் விஜயகுமார், இன்டர்நேஷனல் டைரக்டர் டி எஸ் விஜயகுமார், சவுத் மல்டிபிள் கவுன்சில் செக்ரெட்டரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேவை திட்டத்தை முதல் துணை மாவட்ட ஆளுநர் ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த சேவை திட்டத்தில், ஏழை எளிய மக்கள்,முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் வீல் சேர்,தையல் மிஷின், கேஸ் ஸ்டவ், மின்விசிறி,வெட் கிரைண்டர் வாஷிங் மெஷின் எடை கருவிகள் பள்ளி மாணவர்களுக்கான நோட் புத்தகங்கள் கல்வி உதவித்தொகை மளிகை பொருட்கள் பெண்களுக்கான சாரீஸ் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 150 மேற்பட்டோருக்கு அன்பு முகில் அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில் அன்புமுகில் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் இலக்கியா, அலையன்ஸ் கிளப் அன்பு தலைவர் சௌந்தரராஜன்,செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஆனந்தராஜன், பிஆர்ஓ குமார்,அலையன்ஸ் நிர்வாகிகள் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் பிரபாகரன், கேபினட் ட்ரேஸரர் பாலசுப்ரமணியம், ஜாயிண்ட் கேபினட் செக்ரெட்டரி மோகன் குமார்,மாவட்ட பிஆர்ஓ சண்முகம், ஜோன் சேர்பர்சன் பாலமுருகன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க