• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் தமிழர்களுக்கு ரூ.47 லட்சம்) சம்பளம்

January 28, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளத்தால் அவற்றை பிடிக்கும் பணியில் தமிழகத்தின் இருளர் பழங்குடியினரை சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 68 ஆயிரத்து 888 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 லட்சத்து 84 ஆயிரம்) சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பர்மீஸ் பைதான்கள் எனப்படும் மலைப்பாம்புகள் அதிகரித்த காரணத்தால் பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்காக தமிழகத்தில் வசிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை பாம்பு பிடிக்க அமெரிக்க அரசு புளோரிடா மாகாணத்திற்கு வரவழைத்துள்ளது. அவர்களுடன் இரு மொழி பெயர்ப்பாளர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில், 13 பர்மீஸ் மலைபாம்புகளை பிடித்துள்ளனர். அதில் ஒன்று 16 அடி நீள பெண் மலைப்பாம்பு ஆகும். இவற்றில் 4 பாம்புகளை, முதலை ஏரி தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து பிடித்து அகற்றினார்கள்.

மேலும் படிக்க