• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமேசானில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை

July 12, 2017 தண்டோரா குழு

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் தற்போது இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளது.

பிரபல அமேசான் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அதன் வியாபாரத்தை விரிவாக்கி கொண்டு வருகிறது. இதனால் அதன் போட்டியாளரான பிலிப் கார்ட் நிறுவனத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க உடை, ஸ்மார்ட் போன் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் உணவு மற்றும் மளிகை விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இந்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அமேசான் நிறுவனம் உணவு பிரிவில் சுமார் 5௦௦ மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது என்றும் அதுவும் ஏற்கனவே இந்தியாவில் 5 மில்லியன் டாலருக்கு மேலாக முதலீடு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமேசான் நிறுவனம் உணவு பொருட்களை அமேசான் பான்ட்ரி வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வருகிறது. இந்தியாவின் பிக் பசார், ஸ்டார் பசார் மற்றும் ஹைபெர்சிட்டி ஆகியோருடன் இணைந்து “Amazon Now” செயலி மூலம் மளிகை பொருள்களை விநியோகம் செய்து வருகிறது.

ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் டைகர் குளோபல், டெண்சென்ட் ஹோல்டிங் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க