• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் காமராஜ் மீது இன்னும் ஏன் வழக்குப் பதிவு செய்ய வில்லை – உச்ச நீதிமன்றம்

May 3, 2017 தண்டோரா குழு

ரூ 3௦ லட்சம் மோசடி புகாரில் சிக்கிய தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது இன்னும் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அவரிடம் ரூ 30 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .அப்போது “நீதிமன்ற உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? புகார் தெரிவித்த பினனர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு மேலானவரா” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 -ம் தேதி தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க