• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு மீண்டும் சம்மன்

April 14, 2017 தண்டோரா குழு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து கடந்த 7- ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சோதனையில் சிக்கிய அனைவருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து கடந்த 7 மற்றும் 8-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகினார். எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கடந்த 13-ம் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் வரும் திங்கட்கிழமை(ஏப்ரல் 17) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க