December 10, 2024
தண்டோரா குழு
அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் ஜனவரி 2025-ஆம் கல்வி ஆண்டின், 2 -ஆம் கட்ட முனைவர்ப் பட்டப்படிப்பு சேர்க்கையானது டிசம்பர் 22, 2024 அன்று நிறைவடைவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள்,உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் கூடிய சர்வதேச தரம் வாய்ந்த பொறியியல்,AI,ஹியுமானிடிக்ஸ், மேலாண்மை மற்றும் மருத்துவக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
முழுநேர அறிஞர்களுக்கு மாதம் ₹35,000 வரையிலான உதவித்தொகையும்,₹25 லட்சம் மதிப்பிலான ஆராய்ச்சி நிதியுதவி வழங்கப்படுவது மட்டுமல்லாது Buffalo மற்றும் Politecnico Di Milano போன்ற புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளையும் அம்ருதா பல்கலைக்கழகம் வழங்குகின்றது.
முதுகலைப்பட்ட படிப்பில் (60% அல்லது அதற்கு மேல்) உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.NET/GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி நேர்காணலுக்குச் செல்லலாம். காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்க www.amrita.edu/phd அல்லது [email protected] ஆகிய இணைப்புகளைப் பார்வையிடவும்.
இடம்: இந்தியா முழுவதும் (அம்ருதபுரி, பெங்களூரு, கோயம்புத்தூர், கொச்சி, மைசூர் மற்றும் சென்னை).