• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பொருட்காட்சியினை 16 நாட்களில் 1 லட்சம் நபர்கள் பார்வை : ரூ.13.99 லட்சம் வருவாய் கிடைத்தது

May 31, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த 13ம் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் பொருட்காட்சி அமைந்துள்ளது.

இப்பொருட்காட்சியில் 27 அரசுத்துறை அரங்களும், 6 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசுப்பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15ம், சிறியவர்களுக்கு ரூ.10ம், பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.5ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த பொருட்காட்சியை நேற்று முன் தினம் வரை அதாவது 16 நாட்களில் அரசு பொருட்காட்சியினை பெரியவர்கள், சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பொருட்காட்சியினை காண வருகின்றனர்.

மேலும் படிக்க