• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அழகி போட்டிக்கு ஒரிசாவை சேர்ந்த 12 வயது சிறுமி தேர்வு

May 29, 2017 தண்டோரா குழு

ஜார்ஜியாவில் நடைபெறவிருக்கும் லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் (Little Miss Universe) அழகி போட்டிக்கு ஒரிசாவை சேர்ந்த 12 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்த அழகி போட்டி இம்மாதம் 31-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிக்கு, ஓரிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாலயா நந்தா(12) வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்டாக் நகரிலுள்ள ஸ்டீவர்ட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள் பத்மாலயா. அவளுடைய தந்தை பிரசன்னா குமார் நந்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

கேரளா மாநிலத்தின் கோழிக்கோடில் நடந்த ஜூனியர் மாடல் சர்வதேச போட்டியில் பத்மாலயா நந்தா ‘லிட்டில் மிஸ்’ (Little Miss) பட்டத்தை வென்றார். இதன் காரணமாக ஜார்ஜியாவில் நடைப்பெறும் அழகி போட்டியிலும், கிரீஸ் நாட்டில் நடைப்பெறும் மற்றொரு அழகி போட்டியிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இது குறித்து பத்மாலயா நந்தா கூறுகையில்

“இந்தியாவின் பிரதிநிதியாக இரு நாடுகளில் நடைபெற உள்ள அழகிப் போட்டியில் கலந்துக்கொள்ள போவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக நான் எடுத்துக்கொண்ட கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இந்த இரண்டுப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவேன். பேஷன் வடிவமைப்பு மற்றும் மாடலிங் செய்ய விருப்பமுண்டு. ஆனால் தற்போது, என்னுடைய படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். என் பெற்றோர்கள் தந்த ஊக்கம் தான் இந்த வெற்றிக்கு காரணம்” என்றார்.

மேலும் படிக்க