• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அவினாசிலிங்கம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு – உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பங்கேற்பு

September 28, 2022 தண்டோரா குழு

தேசியத்தர மதிப்பீட்டு அளவுகோல்களை வளர்க்கும் அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் எனும் தேசியக் கருத்தரங்கில் உத்தரபிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

கோவையில் செயல்பட்டு வரும் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் தேசிய அளவில் தேசிய தர மதிப்பீட்டில் முன்னிலை பெற்ற கல்வி நிறுவனமாக சிறந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையி்ல், தேசியத்தர மதிப்பீட்டு அளவுகோல்களை வளர்க்கும் அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அவினாசிலிங்கம் மனையியல்மற்றும் மகளிர் உயர்கல்விநிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இதில், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்தி பென்படேல் கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருவதாகவும்,நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியம் என குறிப்பிட்டார். கருத்தரங்கில்கல்வியின் மேன்மை,பாடத்திட்ட அம்சங்கள் , கற்பித்தல் கற்றல் மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சி , கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கம் , உள்கட்டமைப்பு தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் மேலாண்மை , என. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்தத் தொழில்நுட்ப அமர்வுகள் , என்ற நோக்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதன் துவக்க நிகழ்ச்சியில்,துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் ,முன்னாள் வேந்தர் குழந்தை வேலு,பதிவாளர் கவுசல்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க