• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆகஸ்ட் 5ல் துணை குடியரசுத் துணைதலைவர் தேர்தல்

June 29, 2017 தண்டோரா குழு

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறுகையில்,

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள். ராஜ்யசபா செயலர், தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்படுவார்.

மேலும் குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ல் நடைபெறும். இந்த பதவிக்கான வேட்பு மனுக்களை வருகிற ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 18ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க