• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆக்ராவில் இளைஞர்கள் முகங்களை மூடி செல்லக்கூடாது – காவல்துறை உத்தரவு

May 30, 2017 தண்டோரா குழு

ஆக்ராவில் வசிக்கும் 18 முதல் 3௦ வயது இளைஞர்கள் பொது இடங்களில் தங்கள் முகங்களை மூடி செல்லக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் உத்தரபிரதேஷ் மாநிலத்தின் மதுரா நகரின் ஹோளி கேட் பகுதியுள்ள கொய்லாவாளி காளி என்னும் இடத்தில் விகாஸ் மற்றும் மேக் அகர்வால் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தனர். இம்மாதம் 15ம் தேதி, 6 பேர் முகமூடி அணித்து கடைக்குள் அத்துமீறி நுழைந்து, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற விகாஸ் மற்றும் மேக் அகர்வால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதேபோல், இச்சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கழித்து, பிரோசாபாத் நகரை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் மிட்டால், பட்டபகலில் கடத்தப்பட்டார். சம்பவம் நடந்து 7 மணிநேரம் கழித்து, டுட்லா என்னும் இடத்திலுள்ள பன்சாயி கிராமத்திலிருந்து அவர் மீட்கப்பட்டார்.

இந்த இரண்டு சம்பத்திற்கு பிறகு, ஆக்ரா காவல்துறை உயர் அதிகாரிகள்,

“அதிக வெயிலாக இருந்தாலும், 18 முதல் 3௦ வயது இளைஞர்கள் பொது இடங்களில் தங்கள் முகங்களை மூடிகொண்டு செல்லக்கூடாது. சாலையில் தலைக்கவசம் அணிந்து நடக்கக்கூடாது.
பெண்கள் மற்றும் வயதானவர்கள், தங்கள் முகங்களை மூடி நடந்தால் பரவாயில்லை. மதுராவில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும், குற்றவாளிகள் தங்கள் முகங்களை மூடியிருந்தனர்.

திருட்டு,மற்றும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை அறுத்து செல்வது போன்ற குற்றங்களை 18 முதல் 3௦ வயது இளைஞர்கள் செய்து வருகின்றனர். எனவே இது போன்ற இளைஞர்களை அதிகம் கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இந்த விஷயத்தில் பொது மக்களின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க