March 16, 2023
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் யோகேஸ்வர். கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் இவர்,அண்மையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நடந்த 18-வது தேசிய அளவிலான தடகள போட்டியில் யோகேஸ்வர் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீர்ர்கள் கலந்து கொண்ட போட்டியில்,3000 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் 8 நிமிடம் 36 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை பெற்ற கோவையை சேர்ந்த முதல் வீர்ரான, யோகேஸ்வர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்த யோகேஸ்வர் அடுத்த மாதம் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை உஸ்பெஸ்கிதானில் நடைபெற உள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியன் இளையோர் அத்லெட்டிக் போட்டியில் விளையாடுவதற்கும் தகுதி பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அவருக்கு ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகி கவுரி உதயேந்திரன் ,பள்ளி முதல்வர் சரண்யா மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரே மாவட்ட,மாநில,தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை யோகேஸ்வர் குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.