August 16, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தில் சமூக விரோதிகள் சிலர் தகாத வார்த்தைகளை சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். இதனை அதிகாரிகள் கண்டுபிடித்து நீக்கினர்.
அமெரிக்காவின் 16-வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபம், வாஷிங்டின் டி.சியில் உள்ளது. அதன் அருகில் ஸ்மித்சோனியன் நிறுவனம் இருக்கிறது. அந்த இரண்டு இடங்களிலும் சுவற்றில் தகாத வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.
அந்த வார்த்தைகளை நீக்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாஷிங்டின் டி.சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கியமாக பார்க்கும் இடம், குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லின்கனின் நினைவு மண்டபம் ஆகும். அந்த நினைவு மண்டபம் இரண்டாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.