• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஓபிஎஸ் அணி பரப்புரை

April 6, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஓபிஎஸ் அணி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக(அம்மா ) அணி சார்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதைபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியின் அதிமுக (புரட்சி தலைவி அம்மா ) அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அதைபோல் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். இதையடுத்து, ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு ஏற்ப வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த ஓபிஎஸ் அணி ஆர்.கே நகரில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கடையில், அழகு தமிழ்செல்வி மற்றும் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்
ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குபேட் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது, ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தின் போது பச்சை புடவை உடுத்தி, தேசிய கோடி போர்த்தியிருந்த மாதிரி எப்படி ராஜாஜி ஹாலில் வைக்கபட்டிருந்தாரோ அதே போன்று அவர்களது வாகனத்திலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து பரப்புரை மேற்கொண்டனர்.

ஏற்கனவே ஜெயலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிவந்த ஒபிஎஸ் அணி தற்போது அவரது உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து பரப்புரை மேற்கொண்டு வருவது அனுதாப ஓட்டை வாங்க முயற்சிப்பது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிகின்றனர்.

மேலும் படிக்க