July 13, 2017
தண்டோரா குழு
இந்தாண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு எவ்வளவு நிர்ணயித்துள்ளீர் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் தொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு விசாரித்தது. அப்போது, டாஸ்மாக் கடைகள் மூலம் இந்தாண்டு தீபாவளிக்கு எவ்வளவு மதுவிற்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும்,டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகவே போராட்டம் நடத்துகின்றனர் என்று நீதிபதிகள் கூறினர். மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தை யாரோ தூண்டி விடுவதாக கூறுவதை ஏற்க முடியாது.
இப்போது டாஸ்மாக் கடையை மூடினால் அடுத்த 2 தலைமுறைக்கு பிறகு வருபவர்களை காக்க முடியும் என்றும் 2 தலைமுறைகளை அழிக்கும் டாஸ்மாக் விஷம் போல் பரவியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.