April 18, 2016
தண்டோரா குழு
இந்தியாவில் முப்படைகளான ராணுவப்படை, கப்பல் படை, விமானப் படையை சேர்ந்தவர்கள் அரசு விழாக்களில் உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்வதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.
குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் இந்தியாவின் நுழைவு வாயிலில் அமர் ஜவான் ஜோதி என்ற இடத்தில் முப்படையை சேர்ந்த வீரர்களும் மரியாதை செய்வார்கள்.
பெரும்பாலும் அவர்கள் மரியாதை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அவர்கள் சல்யூட் அடிக்கும் போது ஒருவருக்கோவர் சல்யூட் கை வைக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும் அது ஏன் எனத் தெரியுமா?
இராணுவ மரியாதை (சல்யூட்).
ராணுவ வீரர்கள் சல்யூட் அடிக்கும்போது உள்ளங்கையை விரித்து யாருக்கும் சல்யூட் அடிக்கிறார்களோ அவர்களை நோக்கி இருக்கும். அது ஏன் என்றால்? என் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்னை நம்பலாம் என்று அர்த்தமாம்.
கப்பல் படை (சல்யூட்)
பழங்காலத்தில் மாலுமிகள் எப்பொழுதும் கப்பலில் தான் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இதனால் அவர்கள் கைகள் கிரீஸ் படிந்து அழுக்காக இருக்கும். அந்தச் சமயத்தில் உயரதிகாரிகள் வரும்போது அவர்களுக்கு மரியாதை செய்யும் பொது அழுக்கு கையை காட்டக்கூடாது என்பதற்காக உள்ளங்கையை மறைத்து சல்யூட் அடிப்பார்கள்.
விமானப் படை (சல்யூட்)
விமானப்படை வீரர்கள் சல்யூட் அடிக்கும்போது அவர்களது கை 45 டிகிரி கோணத்தில் வானத்தை நோக்கி இருக்கும். ஏனென்றால் வானத்தை நோக்கி முன்னேறத்தை காட்டுவதாக அர்த்தமாம். ஆரம்பத்தில் இவர்களும் இராணுத்தினரை போலத் தான் சல்யூட் அடித்து வந்தனர் காலப்போக்கில் அதனை மாற்றிவிட்டனர்.