• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா- பாக். போட்டியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் !

June 17, 2017 தண்டோரா குழு

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சுமார் 2000 கோடி வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுமட்டுமின்றி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் சூதாட்டத்திற்கு அனுமதி உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மொத்தம் 2,000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அனைத்து இந்திய கேமிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் இந்திய அணிக்கு சாதகமாக பெட் கட்டுவார்கள் என்பாதால் இந்திய அணி மீது பெட் கட்டுவோருக்கு குறைந்த அளவிலேயே பரிசு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய அணிக்கு 100 ரூபாய் பெட் கட்டினால் 147 ரூபாய் கிடைக்குமாம். அதே பாகிஸ்தான் அணிக்கு 100 ரூபாய் கட்டினால் 300ரூபாய் கிடைக்குமாம்.

மேலும் படிக்க