April 21, 2017
தண்டோரா குழு
இலங்கையில் நடைபெறவிருக்கும் வேசாக் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்கிறார்.
இலங்கை நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை ‘வேசாக்’ என்னும் புத்த மத விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ‘புத்த பூர்ணிமா’ என்றும் அழைப்பர். இந்த கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள இந்திய பிரதமர் இலங்கைக்கு செல்கிறார். அவர் இலங்கைக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும்.
இந்த விழாவை தொடர்ந்து ‘சர்வதேச புத்த மாநாடு’ நடைபெறுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துக்கொள்கிறார். இந்த மாநாட்டில் 1௦௦ நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொள்கின்றனர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இம்மாதம் 28ம் தேதி 5 நாள் அரசு பயணமாக இந்தியாவிற்கு வருகிறார். இந்த பயணத்தின்போது, இருநாடுகளின் உறவு மேம்படவும் மீனவர்கள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இலங்கை பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவார் என்று கருதப்படுகிறது.