September 26, 2022
தண்டோரா குழு
பொள்ளாச்சியில் கடந்த இருபதாம் தேதி இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் தாக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள குமரன் நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகி பொன்ராஜ் மற்றும் சிவா,சரவணகுமார் ஆகியோரின் கார்களின் மீது டீசல் நிரப்பப்பட்ட கவர்களை வீசியும் கோடரியால் வாகனங்களை தாக்கியும் தப்பி ஓடிய மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முகமது ரபீக் 26. மாலிக் என்ற சாதிக் பாஷா 32, ரமீஷ்ராஜா 36 ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.