September 27, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இன்று மேட்டுப்பாளையம் மகாலிங்கபுரம் பகுதியில்இந்து முன்னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் தாக்கப்பட்ட வழக்கு சம்மந்தமாக அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25.) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியின் போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிசிடிவி பதிவுகள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான காரணம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சுழற்சி முறையில் இரவு பகலாக மாவட்டம் முழுவதும் 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் இரண்டு பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில்கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.