April 13, 2017
தண்டோரா குழு
நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல தமிழ் திரையிலகில் கலக்கி வருகிறார். தற்போது அவர் புதிதாக ஒரு அவதாரம் எடுத்துள்ளார்.
ஆம்! ராஜ்கிரனை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இப்படம் நாளை திரைக்குவரவுள்ளது.
இந்நிலையில், பத்திரிகை யாளர்களுக்கான சிறப்பு காட்சி இன்று நடந்தது. அவர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடியும் நேரத்தில் தனுஷ் அங்கு வந்துள்ளார்.
அவரை பலரும் வாழ்த்தியுள்ளனர். அப்போது, மகிழ்ச்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் நின்றார் தனுஷ். நடிகராக தன்னை நிரூபித்த தனுஷ் தற்போது இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.