• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

March 14, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் சின்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடினர். அவர்களை காவலர்கள் துரத்தி அதில் ஒருவரை பிடித்து, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் கத்தி-1, பெரிய இரும்பு கம்பி-1 ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பிடிபட்டவரை விசாரிக்க அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (30) என்பது தெரியவந்து, மேற்படி நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இரவு அலுவலில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் படிக்க