May 30, 2017
தண்டோரா குழு
இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட மத்திய அரசின் தடைக்கு உயர்நீதிமன்றம் 4 வாரம் இடைக்கால தடை விதித்தது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் முடிவுக்கு 4 வாரம் இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.