• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை சென்றார் மோடி

May 11, 2017 தண்டோரா குழு

இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றார்.

உலகம் முழுவதும் புத்தரின் பிறந்தநாளை ‘புத்த பூர்ணிமா’ விழாவாக கொண்டாடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் புத்தர் ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகியவையும் புத்த பூர்ணிமாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த திருவிழா இலங்கையில் தான் வெகு விமரிசையாக நடக்கும்.

இலங்கையில் நடக்கவுள்ள இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, இலங்கை தலைவர்களை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க