May 11, 2017
தண்டோரா குழு
இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றார்.
உலகம் முழுவதும் புத்தரின் பிறந்தநாளை ‘புத்த பூர்ணிமா’ விழாவாக கொண்டாடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் புத்தர் ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகியவையும் புத்த பூர்ணிமாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த திருவிழா இலங்கையில் தான் வெகு விமரிசையாக நடக்கும்.
இலங்கையில் நடக்கவுள்ள இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, இலங்கை தலைவர்களை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.