• Download mobile app
12 Mar 2025, WednesdayEdition - 3318
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது

March 12, 2025 தண்டோரா குழு

ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த தமிழ்த் தெம்பு திருவிழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று (10/03/25) “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈஷாவில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 10 வரை மொத்தம் 12 நாட்கள் ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது. இதன் நிறைவு நாளான நேற்று ஆதியோகி முன்பு “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆதியோகி முன்பு அறுபத்து மூன்று நாயன்மார்களையும் சிவனடியார்கள் பல்லக்கில் சுமந்து வந்து மேடையில் எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சியும், ஆதியோகி உற்சவ மூர்த்தி எழுந்தருளலும் நடைபெற்றது. இதன் பின் தேவாரப் பாடல்களுடன் கைலாய வாத்தியம் முழங்க ஆதியோகியை சுற்றி அறுபத்து மூவர் உலாவும் இறுதியில் ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் ஆராதனையும் நடைபெற்றது.

இதில் பேரூரைச் சேர்ந்த ஓதுவார் மூர்த்திகள் கமலக்கண்ணன் மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடினர்.இந்நிகழ்வில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுபத்து மூவர் ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.

தென்கைலாய பக்தி பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவயாத்திரையில் சிவாங்கா பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கோவை ஈஷா மற்றும் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். அதில் சென்னையில் இருந்து வரும் சிவனடியார்கள் குழு ஆதியோகி மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகள் தாங்கிய தேரினை பாதயாத்திரையாக கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க