• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் ஜி.எம்.நகரில் செல்போன் தர மறுத்த பெண்ணை வீட்டில் வைத்து பூட்ட முயன்ற இளைஞர்

February 24, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம், ஜி எம் நகர் பகுதியில் வீடுகளுக்கு வெளியே தாழ்ப்பாளிட்டு கொண்டிருந்த வட மாநில இளைஞர். பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் அருகில் இன்று காலை வட மாநில வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த பெண் ஒருவரிடம் போன் செய்ய செல்போன் கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு அந்த பெண் செல்போனை தராமல் வீட்டினுள் சென்று விட அந்த வட மாநில வாலிபர் வீட்டில் கேட்டை தாழிட்டுள்ளார்.இதனை கண்ட அருகில் இருந்த மக்கள் சந்தேகமடைந்து அந்த வாலிபரை பிடித்து காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராகுல்(18) எனவும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.போலிசார் விசாரணையில் அந்த வாலிபர் ஊருக்கு செல்ல பணமில்லாமல் இருந்ததால் அன்பு இல்லத்திற்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பி வைத்ததும் அன்பு இல்லத்தில் இருந்து தப்பி வந்து அப்பகுதியில் இருந்த பெண்ணிடம் செல்போன் கேட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தற்போது அந்த வாலிபர் உக்கடம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க