• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உருவ ஒன்றுமையால் 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்

June 12, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் திருட்டில் ஈடுபட்டவரைப் போல உருவம் கொண்டிருந்ததால் ஒருவர் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள ரோலண்ட் பார்க் எனும் வணிக வளாகத்தில் பொருட்களைத் திருடியதாககடந்த 1999ல்ரிச்சர்ட் அந்தோணி ஜோன்ஸ்என்பவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஆனால், தனக்கு அந்த திருட்டு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சம்பவம் நடந்தபோது தனது காதலியுடன் வேறு ஒரு இடத்தில் இருந்ததாகவும் ஜோன்ஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.எனினும் சிசிடிவி காட்சிகளும் ஜோன்ஸுக்கு எதிராகவே இருந்ததால் அவருக்கு சிறை தண்டனை உறுதி செய்யபட்டது.

இதையடுத்து சிறைக்கு சென்ற பின் தன்னை போன்ற உருவம் கொண்ட ஒரு நபர் இருப்பது சிறைவாசிகள் மூலமாக ஜோன்ஸுக்கு தெரியவந்தது. இதன்பின் தனது வழக்கறிஞர் மூலமாக தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஜோன்ஸைப் போலவே உருவ ஒன்றுமை கொண்ட ஒருவர் திருட்டில் ஈடுபட்டிருந்ததும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலேயே அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ரிக்கி என்ற அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்பின் இருவரிடமும் நடைபெற்ற விசாரணையைஅடுத்து ஜோன்ஸை விடுவித்து ஜான்சன் கவுண்டி நீதிமன்ற நீதிபதி கெவின் உத்தரவிட்டார்.

ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை கொண்ட ஒரே காரணத்தினால் 17 ஆண்டுகள் ஜோன்ஸ் சிறை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க