• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு அஞ்சுகிறது – மு.க.ஸ்டாலின்

June 24, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு அஞ்சுகிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில் “உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை அரசு நீட்டித்திருக்கிறது. அந்த மசோதாவிற்கு எதிர்ப்பை காட்டுவதற்காகவே திமுக வெளிநடப்பு செய்துள்ளோம்.

அதிமுகவிடம் இரட்டை இலை சின்னம் இல்லை, கட்சியும் இரண்டாக மூன்றாக உடைந்திருப்பதால் தேர்தலை நடத்த அஞ்சுகிறது.” என்றார் ஸ்டாலின்.

மேலும் படிக்க