• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பரிமாறி ஆட்சியர் உணவருந்தினார்

December 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் 30 நம்பிக்கை மையங்களும்,98 துணை நம்பிக்கை மையங்களும்,26 சுகவாழ்வு மைய சிகிச்சை மையங்களும்,2 ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும்,6 துணை கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும்,4 அரசு ரத்த வங்கிகளும்,7 ரத்த சேகரிப்பு மையங்களும், ஒரு இலவச சட்ட ஆலோசனை மையமும் செயல்பட்டு வருகிறது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உழவர் பாதுகாப்புத்திட்டம்,முதியோர் உதவித்தொகை திட்டம், விதவை உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,கோவை சாரதாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட சமபந்தி போஜனத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்சியர் சமீரன் உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

மேலும் படிக்க