• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எய்ம்ஸில் தலைகள் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் சிகிச்சைக்காக அனுமதி

July 14, 2017 தண்டோரா குழு

ஓடிஸாவில் தலைகள் ஒட்டி பிறந்த இரட்டையர்களுக்கு புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

ஓடிஸா மாநிலத்தின் கந்தாமால் மாவட்டத்திலுள்ள மிலிபாடா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஹனி மற்றும் சின்ஹா என்னும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அந்த குழந்தைகளின் தலை ஒட்டியிருந்தது. அதை பிரிப்பதற்காக புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தங்கள் பெற்றோருடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

இந்த குழந்தைகளின் மருத்துவச் செல்விற்காக மாவட்ட நிர்வாகம் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. அதேபோல், மாவட்ட நோயாளிகளின் நலன்புரி கழகம் 25,௦௦௦ ரூபாய் வழங்கியுள்ளது. இது தவிர, சிகிச்சைக்கான அனைத்து செலவுகளை மாநில சுகாதார துறை ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்து உள்ளது.

மேலும், தேசிய இளைஞர் நலன் உதவி தலைவர் சௌம்யா சமன்டாரே மற்றும் நுபடா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆயுஷ், அந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடியும் வரை அந்த குடும்பத்தினருடன் இருப்பர்.

மேலும் படிக்க