• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏமன் நாட்டில் சுமார் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

August 3, 2017 தண்டோரா குழு

ஏமன் நாட்டில் சுமார் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக Save The Children அமைப்பு தெரிவித்துள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், புரட்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஏமன் நாட்டு போரினால், 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமலும், அந்நாட்டு மக்களில் பெரும்பாலோனருக்கு சரியான உணவு கிடைக்காமலும் சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அந்த போரினால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள் தான். அவர்களால் எழுந்துக் கூட நிற்க முடியாமல், பசியால் வாடி இறந்து வருகின்றனர்.

இதேநிலை தொடர்ந்தால், ஏமன் நாட்டில் சுமார் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த குழந்தைகளை காப்பாற்ற சரியான நடவடிக்கையை உடனே எடுக்கவேண்டும் என்று சர்வதேச Save The Children அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஏமன் நாட்டில் காலேரா நோய் பரவி வருகிறது. குழந்தைகளும் பெரியவர்களுக்கும் சரியான உணவு கிடைக்காததால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால் இது வரை 1,900 உயிரிழந்துள்ளனர், 425,000 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க