• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபோன் பெயரை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தத் தடை.

May 4, 2016 தண்டோரா குழு

உலகின் புகழ்பெற்ற மொபைல் போன் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம், ஐபோன் பெயரில் மொபைல் போன்கள் விற்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனமான ஜிண்டாங் டியான்டி நிறுவனம் ஐபோன் என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் ஹேண்ட் பேக் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஐபோன் என்ற பெயரை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் ஓரு வழக்குத் தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீனாவின் பெய்ஜிங் மாநகர நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாட்டல்களைக் கடந்த 2009ல் தான் சீனாவில் விற்கத் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், ஐபோன் என்ற பெயரில் ஹேண்ட் பேக்குகள் மற்றும் மொபைல் போன் கவர்களைக் கடந்த 2007 முதலே விற்று வருகிறது ஜிண்டாங் டியான்டி நிறுவனம்.

இதனால் சீனாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் என்ற பெயரில் மொபைல் போன்களை விற்கத் தடை விதிக்கவேண்டும் என ஜிண்டாங் டியான்டி கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து சீனாவில் ஐபோன் என்ற பெயரை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது இது ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க