• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.ஜே.கே கட்சி சார்பில் மின் கட்டணம், ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

August 5, 2022 தண்டோரா குழு

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கோவை மாவட்டத்தில் மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி வரி உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் குறித்து மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகையில்,

மக்கள் அன்றாடம் சாப்பிடும் அரிசியிலும் ஜி.எஸ்.டி வரி புகுந்து விட்டது.இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், மாநில அரசாங்கம் மின்கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. சொத்து வரியையும் உயர்த்தி உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அவற்றிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஐ.ஜே.கே கட்சி
கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் குளோரி ஜான்பிரிட்டோ, கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நூர் பாத்திமா,கோவை மாநகர மாவட்டத் தலைவர் வடக்கு மண்டலம்
பி.கே. அந்தோணிசாமி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எர்னஸ்ட் ராபின், கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க