• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை

February 15, 2017 தண்டோரா குழு

லிபியாவில் இருந்து பல்வேறு காரணத்திற்காக கடத்தப்பட்ட 13 எகிப்தியர்களை விடுதலை செய்ததாக அந்நாடு அறிவித்துள்ளது.

2௦11ம் ஆண்டு முதல் பல்வேறு குழப்பம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை நிறைந்த பகுதியான கிழக்கு லிபியாவிற்கு 13 எகிப்தியர்கள் கடத்தப்பட்டனர். புதன்கிழமை(பிப்ரவரி 15) விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று எகிப்து ராணுவம் அறிவித்துள்ளது.

எகிப்து ராணுவத்தின் செய்திதொடர்பாளர் கர்ணல் தமர்-அல்-ரிபாய் கூறுகையில், “வடகிழக்கு லிபியாவின் அஜ்டபியா பகுதியை சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல் 13 எகிப்தியரை கடத்தியது” என்றார்.

எகிப்து ராணுவ அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “லிபியாவின் ராணுவ ஜெனரலுடன் ஒருங்கிணந்து செயல்பட்டதால் அவர்களுடைய விடுதலை சாத்தியமானது” என்று கூறியுள்ளது.

2௦11ல் நடந்த புரட்சியில் நீண்ட நாள் சர்வாதிகாரியாக இருந்த மோமர் கடாஃபி போராளிகளின் உதவியுடன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதன் பிறகு லிபியா பல அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளில் சிக்கி தவித்தது.

2௦15ம் ஆண்டு ஐஎஸ் குழு எகிப்தை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களின் தலை வெட்டப்படும் காணொளியை வெளியிட்டது. இந்த அட்டூழியத்திற்கு பதிலடி தர ஐஎஸ் குழு இருந்த பகுதிகளில் விமானத் தாக்குதல்களை எகிப்து நடத்தியது. இதையடுத்து லிபியாவிற்கு புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான எகிப்து மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க