• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்சி பணியை தொடர்வேன் தினகரன் அதிரடி

June 3, 2017 தண்டோரா குழு

மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என்று சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் மீது டெல்லி போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் அவரது நண்பரும் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

“என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சிப்பணிகளை மீண்டும் தொடர்வேன்”.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க