• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கமல் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்து இருப்பாரா- முதலமைச்சர் கேள்வி

March 14, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல் இதுவரை எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசியதாவது

நடிகர் கமல்ஹாசன் என்னை பற்றியும் தற்போது உள்ள ஆட்சித் தொடரக்கூடாது என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.ஆட்சி மீது குற்றம்சாட்டுபவர்கள் என்ன குறை கண்டார்கள்.கமல் இதுவரை எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என கேள்விஎழுப்பினார்.

விஸ்வரூபம் படம் வெளியாக உதவி செய்தவர் ஜெயலலிதா என்றும் கமல்ஹாசன் அந்த நன்றியை மறந்து பேசுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், எனக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை என்பதா? நான் அடிமட்ட தொண்டனாக இருந்து தான் தற்போது முதலமைச்சராக வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க