• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருமத்தம்பட்டி, சூலூரில் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

February 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நகராட்சி, சூலூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட கலெக்டர் சமீரன் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கருமத்தம்பட்டி நகராட்சி வாக்கு எண்ணும் மையமான எஸ்டி ஜோசப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளபாளையம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பிடம், மின்வசதி ஆகிய வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இவ்வாய்வில் கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனர் முத்துசாமி, வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க