• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் இந்திரா உணவகம்

August 16, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவில் இந்திரா உணவகத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் இந்திரா உணவகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.இந்த உணவகத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார்.

இத்திட்டம் குறித்து பேசிய ராகுல்காந்தி

ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் உணவளிக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது பெருமை அளிக்கிறது.இந்த உணவகத்தில் காலை உணவு ஐந்து ரூபாய்க்கும், மதியம் மற்றும் இரவு உணவுகள் பத்து ரூபாய்க்கும் விற்கப்படவிருக்கிறது.முதலில் பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.

மேலும்,இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா,மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.இந்த திட்டம் சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க