• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நூதன ஆர்ப்பாட்டம்

May 23, 2017 தண்டோரா குழு

கோவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 50 சதவீத கல்வி கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நோட்டு மாலை அணிந்து நுதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கோவையிலும் தொழில் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த சூழலில் தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணங்களை வசூலிப்பதால் பெற்றோர்கள் அவதிக்குள்ளவதாககுற்றம்சாட்டிகோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தனியார் பள்ளிகளில் நடைபெறும் கல்வி கொள்ளையை சித்தரிக்கும் வகையில் நோட்டு மாலை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டுமெனவும், தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடுக்க வேண்டுமெனவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டுமெனவும், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசாணை 92 ஐ அமல்படுத்த வேண்டுமெனவும்
வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க