• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கழுத்தில் கத்தி..உயிர் பயத்தில் வாலிபர் கொடுத்த பணம் வழிப்பறியில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

July 15, 2023 தண்டோரா குழு

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (21). இவர் கோவையில் பெட்டி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமாநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது கீர்த்தி ராஜனை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து வாலிபர் ஒருவர் பணம் தருமாறு மிரட்டியுள்ளார். உயிர் பயத்தில் கீர்த்தி ராஜன் தன்னிடம் உள்ள ரூ.1000 தந்துள்ளார்.

பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்டது பீளமேடு பகுதியை சேர்ந்த மதுசூதன் (29) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க