March 29, 2017
தண்டோரா குழு
காதலருடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன் என்று பாலிவுட் நடிகை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் கவிதா ராதேஷ்யாம்(31).அப்படியே பாலிவுட் பக்கம் சென்ற அவர் பின்னர் கன்னட படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் மாடிப் பகுதிக்கு சென்று அவர் ரசிகர்களுக்கு பெரிஸ்கோப் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதில், தனது அபார்ட்மெண்ட் மாடியில் காதலருடன் சேர்ந்து உறவு கொள்வதை லைவ் ஷோவாக பெரிஸ்கோப் மூலமாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி இதற்கான காரணத்ததை அவர் தெரிவித்துள்ளார். அது இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்க காதல் தான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபிக்க உறவு கொள்வதை லைவாக காட்ட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்னும் 4 நாட்கள் இருப்பதால் இன்னும் லைக்குகள் வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.