• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

June 23, 2017 தண்டோரா குழு

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழரின் கலாச்சார அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு அருங்காட்சியாகத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக 2 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டதாகவும் தொல்லியல் துறையும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு வழங்கிய நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க