February 27, 2025
தண்டோரா குழு
வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புவோர்களுக்கு குறைந்த விலையில் அதன் ஏற்பாடுகளை செய்யும் விதமாக கோவையில் மெட்ராஸ் மார்டன் டூரிசம் எனும் கிளை திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.குறிப்பாக திருமணம் முடிந்த தம்பதிகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அனைவரும் இன்ப சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா செல்லும் நபர்கள் சிறந்த முறையில் குறைந்த விலையில் சென்று வர கோவை செல்வபுரம் பகுதியில் மெட்ராஸ் மார்டன் டூரிசம் எனும் கிளை திறக்கப்பட்டது.
துபாயை தலைமையிடமாக கொண்டு விளங்கும் இந்த கிளை பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கோவையில் முதல்முறையாக கிளை திறக்கப்பட்டுள்ளது.
கிளையின் துவக்க விழாவை முன்னிட்டு ஸ்ரீலங்கா,பாலி, தாய்லாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு குறைந்த விலையில் பயணிக்க ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இங்கு உள்ளூர் சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் பேருந்துகள் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி பெருமாள் தெரிவித்துள்ளார்.