• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தையின் ஓவியத்தால் பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

June 14, 2017 தண்டோரா குழு

டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில், குழந்தை வரைந்த ஓவியத்தை வைத்து பாலியல்குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையைநீதிமன்றம் வழங்கியது.

தாய் இறந்து,தந்தையால்அனாதையாக விடப்பட்ட 8 வயது பெண் குழந்தை ஓன்று அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அப்போது அத்தையின் கணவர் அக்தர் அகமது, அந்தக் குழந்தையை யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிசெய்து வந்துள்ளார்.

இந்த விஷயம் தெரியவந்ததும் அக்தர் அகமது கைது செய்யப்பட்டார். குழந்தை, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கான ஆதாரமாக மருத்துவச்சான்றிதழ் இருந்துள்ளது. ஆனால், அக்தர் அகமது கடைசி வரை தன்னை நிரபராதியாகவே காட்டிகொண்டிருந்தார்.

இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. இதயைடுத்து, நீதிபதி, அந்தக் குழந்தையிடம் நடந்த விஷயங்களை வரையச்சொல்லி கிரையான்ஸும் பேப்பரும் வழங்கியுள்ளார்.

அப்போது அக்குழந்தை ஒரு வீட்டில் குழந்தை நிர்வாண நிலையில் கையில் பலூன்கள் வைத்திருந்த நிலையில் நின்றுகொண்டிந்தது போலவும், அதன் அருகே ஆடைகள் களையப்பட்டு கீழே இருப்பது
போல வரைந்திருந்தது.

இதனைத்தொடர்ந்து குழந்தையின் ஓவியத்தையும், மருத்துவச் சான்றிதழையும் ஆதாரமாக வைத்து நீதிபதி அக்தருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கினார்.

மேலும் படிக்க