• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தையைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை

February 17, 2017 தண்டோரா குழு

தாயே குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு ஹரிவர்ஷா என்கிற பெண் குழந்தை இருந்தது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. அதன் காரணமாக இருவரும் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு திவ்யா தனது பெண் குழந்தை ஹரிவர்ஷாவைத் தூக்கிக்கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அருகில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்னையில் தனது மகள் ஹரிவர்ஷாவைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் திவ்யாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை உத்திரவிட்டார். இதனையடுத்து திவ்யா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க