• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூலி வேலை செய்யும் யோகா வீராங்கனை

June 30, 2017 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மாநிலத்தில் யோகா போட்டியில் தங்கம் வென்ற பெண் கடனை திருப்பி தர கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் தாமினி சாஹு(19) என்னும் பெண், ராய்பூரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தாரா கிராமத்தை சேர்ந்த யோகா வீராங்கனை ஆவார்.

நேபாலின் தலைநகரான காத்மண்டுவில் மே 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற South Asian Yoga Sport Championship போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஒரு தங்க பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், மற்ற யோகா போட்டியில் கலந்துக்கொண்டு, 3 தங்க பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.

இது குறித்து தாமினி கூறுகையில்,

“காத்மண்டுவில் நடந்த போட்டியில் கலந்துக்கொள்ள என்னிடம் பணம் இல்லை. ராய்பூர் நகரின் குருத் பகுதியை சேர்ந்த அமைச்சர் அஜய் சந்திரகரிடம் பண உதவி கேட்டேன். ஆனால், எனக்கு பண உதவி கிடைக்கவில்லை. பிறகு 2% வட்டிக்கு கடன் வாங்கி போட்டியில் கலந்துக்கொண்டு, தங்க பதக்கம் வென்றேன். மீண்டும் வீடு திரும்பிய பின், வாங்கிய கடனை திருப்பி தர, கூலி வேலை செய்து வருகிறேன்” .

தினமும் 8 முதல் 1௦ மணிநேரம் வேலை செய்தும், ஒரு நாளைக்கு 1௦௦ முதல் 15௦ ரூபாய் தான் கிடைக்கிறது. எனது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. எனது தாயும் என்னுடன் சேர்ந்து கூலி வேலை செய்கிறார். மாலையில் நேரம் கிடைத்தால் யோகா செய்வேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க